திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், பிப்ரவரி 26 முதல் ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடு வீடாக செல்லும் பரப்பரை ஆரம்பமாகும். தேர்தலுக்குப் பிறகு பல மாற்றங்களை திமுகவிலும், அரசிலும் எதிர்பார்க்கலாம். மக்களவைத் தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

திமுகவின் அடிமட்ட தொண்டர்களின் செயல்பாடு வரை தலைமைக்கு தெரியும். 4000-க்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு வந்துள்ளன. பாஜக அரசின் அநீதிகள், திமுக அரசின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.