இந்தியாவைப் பொறுத்த வரையில் பல்வேறு மாநிலங்களிலும் சாலை விபத்துக்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருப்பது தான். அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது பின் சீட்டில் அமர்ந்திருப்பவர் இடம் பேசினால் அபராதம் விதிக்கும் திட்டத்தை அமல்படுத்த கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கவன சிதறலை குறைக்கும் வகையில் இந்த விதியை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.