மத்திய அரசானது விரைவில் அடுத்த தவணை பணத்தை நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றும். அடுத்த மாதம் விவசாயிகளுக்கு அரசு ரூபாய்.2000 வழங்கலாம் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் 14வது தவணைக்காக காத்திருக்கின்றனர்.

ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் படி ஜூன் மாதத்தில் பிஎம் கிசானின் அடுத்த தவணைக்கான பணத்தை மத்திய அரசானது வழங்கும். இம்முறை ஜூன் 23-ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் தவணையாக ரூ.2,000 வரலாம் என்று தெரிகிறது. 14-வது தவணைக்கான பணம் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.