
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் ஜாம் கேட் அருகே ராணுவ வீரர்கள் துப்பாக்கி பயிற்சி பெறும் மையம் அமைந்துள்ள நிலையில் இங்கு பயிற்சி பெறும் இரு ராணுவ வீரர்கள் அந்த மையத்திற்கு அருகே உள்ள ஒரு பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களுடன் இரு பெண்களும் சென்ற நிலையில் 8 பேர்கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. அவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் பெண்களிடமிருந்த செல்போன் மற்றும் நகை பணம் போன்றவற்றை கொள்ளையடித்த நிலையில் இரு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதாவது ராணுவ வீரர்களை கட்டிப்போட்டு அவர்களை மிரட்டி பெண் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி ஒரு ராணுவ வீரர் மற்றும் பெண்ணை பிடித்து வைத்துக்கொண்டு மற்றொரு ராணுவ வீரரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வருமாறு அவர்கள் மிரட்டியதால் பயந்துபோன அவர் உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் அங்கு சென்ற நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பின்னர் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிய நிலையில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்திருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பிரியங்கா காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள x பதிவில், பாஜகா அளும் மத்திய பிரதேச மாநிலத்தில் இரு ராணுவ வீரர்களை தாக்கி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று பாஜக ஆட்சி செய்யும் உத்திர பிரதேசம் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக சாலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த இரு சம்பவங்களும் இதயத்தை உலுக்குகிறது. நாட்டில் தினசரி 86 பெண்கள் வன்கொடுமை மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பலியாகின்றனர். பெண்களுக்கு வீட்டிலும் சரி வெளியிலும் சரி எங்கேயும் பாதுகாப்பு என்பதே இல்லை. மேலும் இத்தகைய கொடூர செயல்களால் ஒவ்வொரு நாளும் பெண்களின் மன தைரியம் உடைகிறது என்று பதிவிட்டுள்ளார்.