பிக் பாஸ் ஏழு நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பவா செல்லத்துறையும் வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சனையும் இரண்டாக இருந்து வருகிறது. இந்த வார தலைவராக யுகேந்திரன் இருந்து வருகிறார்.

இவரால் இந்த பிக் பாஸ் தலைமை நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர் .கடந்த வார பிரச்சனையை கடந்த சனி ஞாயிறு இரண்டு தினங்களாக கமலஹாசன் வந்து தீர்த்து வைத்து சென்றார் . தற்போது மீண்டும் பிரச்சினையை ஆரம்பித்துள்ளது. நாமினேஷன் நிகழ்வு ஏற்பட்டுள்ள நிலையில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம் சாட்டை நாமினேஷன் செய்து வருகிறார்கள்.