
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 18 வயதுக்கு உட்பட்ட இந்த சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். கடந்த 24ஆம் தேதி இந்த சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒருவர் காரில் வந்து அந்த சிறுமியை நிறுத்தினார்.
அந்த நபர் தன்னை ஒரு நடனப் பயிற்சியாளர் என்று அறிமுகப்படுத்திய நிலையில் பின்னர் அந்த சிறுமியிடம் நடனம் கற்று கொடுப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி சிறுமி காருக்குள் ஏறிய நிலையில் காருக்குள் வைத்தே சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த நபர் சிறுமியை அவரது வீட்டின் அருகே இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் தன் பெற்றோரிடம் சிறுமி நடந்த விவரங்களை கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பாரதி கண்ணன் என்ற 28 வயது நபர்தான் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. அவரை தற்போது காவல்துறையினர் கைது செய்த நிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.