அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிமுகப்படுத்திய ‘பிக் பியூட்டிபுல் பில்’ எனப்படும் வரி மற்றும் செலவுத் திட்ட மசோதா, கடும் விவாதங்களுக்கு நடுவே காங்கிரசில் வெறும் 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 218 வாக்குகளும், எதிராக 214 வாக்குகளும் பதிவானது. இதனையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜூலை 4 – அமெரிக்க சுதந்திர தினம்) மாலை 5 மணிக்கு, அதிபர் டிரம்ப் இந்த மசோதாவில் கையெழுத்திடுவார் என பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்தார். இதன் மூலம் மசோதா சட்டமாக அமலுக்கு வரும்.

இந்த மசோதாவில்,
🔸 இராணுவ செலவுகளை அதிகரித்தல்,
🔸 அவதானிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த நிதி ஒதுக்கல்,
🔸 வரி நிவாரணங்களை நீட்டிக்க ₹4.5 டிரில்லியன் டாலர் ஒதுக்கல் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
ஆனால், இது அமெரிக்காவின் மொத்த கடனை ₹3.4 டிரில்லியன் டாலர் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இந்த மசோதாவால், ஏழைகளுக்கான உணவு உதவித் திட்டம், மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் உள்ளிட்டவை பெருமளவு நிதி குறைபாடுகளை சந்திக்கும் என கூறப்படுகிறது. இதன் விளைவாக, சுமார் 1.7 கோடி அமெரிக்கர்கள் சுகாதார பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த மசோதாவை எதிர்த்து, ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் காங்கிரசில் உரையாற்றியபோது, “இந்த மசோதா அமெரிக்க மக்களின் வாழ்க்கையை அழிக்கும். இது ஒரு அருவருப்பான மற்றும் ஆபத்தான மசோதா” என கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, முன்னாள் அதிபர் ஒபாமாவும், “1.6 கோடி மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு பறிபோகும் நிலை உருவாகும்” எனவேதனை வெளியிட்டுள்ளார்.

இந்த மசோதாவின் அமலால், வலதுசாரிப் பொருளாதார கொள்கைகளுக்கு வலு சேரும் என்றும், அதே நேரத்தில் ஏழைகள், நடுத்தர வகுப்பினருக்கு கடுமையான தாக்கம் ஏற்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.