இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் காரணமே புரியாமல் டிரெண்டாகிவிடும். அப்படித்தான் சமீபத்தில் கொரிய மொழிப்பாடலான அன்னத்த பார்த்தியா என்ற பாடல் மிகவும் வைரலானது. இந்நிலையில் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒருவர் மேடையில் பாடும்போது லட்சக்கணக்கானோர் அங்கு கூடி நிற்கிறார்கள்.

ஆனால் அவர் பாட்டு பாடுவது போல் தெரியவில்லை அழுவது போல் தெரிகிறது. அவர் அழுது கொண்டே புரியாத பாஷையில் பாடும் நிலையில் அதனையும் கீழே எண்ணற்ற ரசிகர்கள் என்று ரசித்து கேட்டு ஆரவாரப்படுத்துகிறார்கள். இந்த வீடியோவை வெளியிட்டவர் உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா என நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.