உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஓம்வதி தேவி என்பவர் தன்னுடைய புத்திசாலித்தால்  150 பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு, வழக்கம்போல் தண்டவாளம் அருகே நடைப்பயிற்சிக்கு சென்ற ஓம்வதி தேவி, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை கவனித்தார். அதனை பார்த்தவுடன், அந்தப் பாதையில் ரயில் செல்வதால் பயணிகள் அனைவரும் உயிரிழக்கக்கூடும் என நினைத்தார்.

அப்போது ரயில் ஒன்று வேகமாக அப்பகுதிக்குள் நுழைய இருந்தது. உடனடியாக அவர் தன்னுடைய சிவப்பு சேலையை கழற்றி, அந்த ரயிலுக்கு எதிராக அசைத்தார்.

சிவப்பு நிறம் அபாயத்தை குறிக்கும் என்பதனை முன்பே அறிந்திருந்த அவர், அதையே எச்சரிக்கையாக பயன்படுத்தினார். ரயில் ஓட்டுநர் அந்த செயலை கவனித்து ரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்தினார். இதனால் ஒரு பெரும் விபத்தும், நூற்றுக்கணக்கான உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டது.