உறுதியாக கூறுகிறோம் பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுக கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். அதிமுக மக்களை மட்டுமே நம்பி உள்ளதாகவும், திமுக கூட்டணியை நம்பி மட்டுமே உள்ளதாகவும் கூறினார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பு திமுக அமைச்சர்கள் சிலர் சிறைச்செல்வார்கள் என்றும் இபிஎஸ் சாரினார்.