கர்நாடகா பாஜக மூத்த தலைவரும் மேலவை உறுப்பினருமான தேஜஸ்வினி கவுடா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் என்பியாக இருந்த அவர் 2014 பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து கர்நாடகா மேலவை உறுப்பினராக இருந்து வந்த அவர், பதவியை ராஜினாமா செய்த 30 நாட்களில் மீண்டும் காங்கிரஸ் இணைந்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் 23 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.