எம்பியாக நான் தொடரக்கூடாது என முயன்றவர்களுக்கு நன்றி என திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டது மூலம் காங்கிரசின் உட்கட்சி பஞ்சாயத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விஜயதாரணையை தொடர்ந்து திருநாவுக்கரசர் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அப்போது அதை அவர் மறுத்திருந்தார். தற்போது வெளிப்படையாக பஞ்சாயத்து வெடித்துள்ளதால் அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.