ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக இந்தியா இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியது.

இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளின் முகாம்கள் குறி வைக்கப்பட்டன. இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.

இந்நிலையில் இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதல் நடத்தியது பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப் வெள்ளை மாளிகை வாசல் அருகே நடந்து வரும்போது தான் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறித்து அறிந்தோம்.

கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஏதோ நடக்கப்போகிறது என்று எங்களுக்கு தெரிகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.