
2023 ஆம் வருடத்திற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
It's shocking and upsetting to see that people are being stopped from cheering "Pakistan Zindabad" at the game.
This totally goes against what the sport is about!#CWC23 #PAKvsAUS #AUSvsPAK pic.twitter.com/iVnyFlNB09
— Momin Saqib (@mominsaqib) October 20, 2023
இந்நிலையில் போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அணியை உற்சாகப்படுத்துவதற்காக பாகிஸ்தான் சிந்தாபாத் என கூறியுள்ளார். இதற்கு அங்கு காவலில் இருந்த போலீசார் ஒருவர் இவ்வாறு சத்தமிட வேண்டாம் என கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் தான் பாகிஸ்தானில் இருந்து வந்திருப்பதாகவும் தான் வேறு என்ன சொல்ல முடியும் என்றும் பதில் கேள்வி கேட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.