
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி பகுதியில் மாலிர் சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மிகப்பெரிய குழப்பம் நடந்துள்ளது. அதாவது நிலநடுக்கத்தின் காரணமாக 1000-க்கும் ஏமேற்பட்ட கைதிகளை நுழைவு வாயிலுக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது திடீரென ஏராளமான கைதிகள் கதவை உடைத்து கொண்டு தப்பி ஓடினார். கிட்டத்தட்ட 217 கைதிகள் தப்பி ஓடியதாக கூறப்படும் நிலையில் இதில் சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே இதனால் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அதில் ஒரு கைதி மரணம் அடைந்தார்.
அதோடு இந்த மோதலில் 3 சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு காவலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 217 கைதிகள் தப்பி ஓடியதாக தெரியவந்த நிலையில் அவர்களை தேடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சுமார் 80 கைதிகள் பிடிபட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்களையும் தேடும் பணிகள் நடைபெறுகிறது. இதற்கிடையில் அந்த சிறைச்சாலையின் தலைமை காவலர் தலைமறை வாகிவிட்ட நிலையில் சில அதிகாரிகளுக்கும் இதில் கூட்டு சதிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது