
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், சுற்றுலாப் பயணிகளுக்காக வீடியோ எடுத்து கொண்டிருந்த ஒரு உள்ளூர் ஒளிப்பதிவாளர் தற்போது தேசிய விசாரணை அமைப்பின் (NIA) விசாரணையில் முக்கியமான சாட்சியாக உள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஒளிப்பதிவாளர், தாக்குதல் நேரத்தில் தன்னை காப்பாற்ற ஒரு மரத்தின் மேல் ஏறிச் சேர்ந்தபோதும், கைபேசியில் தொடர்ந்தும் தாக்குதல் காட்சிகளை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார் என்று பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது தாக்குதலின் பிரதான ஆதாரமாக கருதப்படுகிறது.
முன்னதாக இது ஒரு திடீர் தாக்குதல் என்று சந்தேகம் எழுந்திருந்தாலும், தற்போது NIA அதிகாரிகள் இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
“அனைவரும் நேரடியாக தலையில் தாக்கப்பட்டிருக்கின்றனர்,” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, நால்வர் கொண்ட பயங்கரவாதிகள் இரு குழுக்களாக பிரிந்து மேடோ பகுதியில் இருபுறத்திலிருந்தும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருவரும் கடைகளின் அருகே இருந்து, உணவு அருந்திய சுற்றுலாப் பயணிகளை மதம் கேட்டறிந்த பிறகு, ‘கல்மா’ சொல்வதை கோரியதாகவும், சொல்ல முடியாதவர்களை நேரடியாக சுட்டுக் கொன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
#BreakingNews | CNN Exclusive: Massive Manhunt Launched for Absconding Adil in Pahalgam Attack; Links to LeT Uncovered
Exclusive Input: @manojkumargupta@Ieshan_W shares details@kritsween| #PahalgamAttack pic.twitter.com/K6T7xfO4OE
— News18 (@CNNnews18) April 27, 2025
இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கும்போது பயங்கரவாதிகள் இரண்டு கைப்பேசிகளை – ஒரு சுற்றுலாப் பயணியிடமும், ஒரு உள்ளூர் குடிமகனிடமும் – திருடிச் சென்றுள்ளனர்.
அவை தற்போதும் கண்காணிக்கப்படுகின்றன, ஆனால் இரண்டுமே தற்போது செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
இதே நேரத்தில், தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து AK-47 மற்றும் M4 ரைஃபிள் துப்பாக்கிகளின் வெடிபடுகை குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. M4 ரைஃபிள்கள், ஆஃப்கான் போரின் பின் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் அதிகம் பயன்படுத்திய ஆயுதமாகும் என்பதனால், இது தாக்குதலுக்குப் பாகிஸ்தானின் தொடர்பை உறுதிப்படுத்தும் இன்னொரு ஆதாரம் என NIA தெரிவித்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட நால்வரில் ஒருவரான அதில் தோகர், 2018ல் ஹிஸ்புல் முஜாஹிதீனில் சேர்க்கப்பட்ட பீகார் பூர்வகுடி என்றும், பின் பாகிஸ்தானில் சட்டப்பூர்வமாக கடந்து, அங்கு லஷ்கர்-எ-தொய்பா அமைப்பில் பயிற்சி பெற்றதும், கடந்த 2024இல் மீண்டும் பள்ளத்தாக்கில் நுழைந்ததும் தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில்தோகர் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டி மற்றும் உள்தகவல் ஆதரவு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.