
மத்திய கேனியாவில் உள்ள 9 நைரி கவுண்டி பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் செயல்பட்டு வரும் விடுதியில் ஏராளமான குழந்தைகள் தங்கி படித்து வரும் நிலையில் இன்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 17 குழந்தைகள் உடற்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு 13 குழந்தைகள் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் இறந்த குழந்தைகள் அனைவருக்கும் 5-12 வயது தான் இருக்கும். இந்த விபத்து குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்து அனைவர்களையும் கலங்க வைத்துள்ளது.