தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த அயன்ராசாபட்டி பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கான காலை உணவை பெண் சமையலர் தயாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதனை  சத்துணவு கூடத்தின் பெண் சமயலர் கவனித்ததால் உடனடியாக அறையை விட்டு வெளியேறினார். இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பினர்.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினரக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சில மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.