கடந்த வருடம் மே மாதம் ஷேக் மனா  என்பவரோடு துபாய் இளவரசி ஷைகாவுக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகள் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த வருடம் மே மாதம் பெண் குழந்தையும் இவர்களுக்கு பிறந்தது. இந்த நிலையில் இளவரசி ஷைகா அவருடைய கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில் , அன்பான கணவரே, நீங்கள் பிற துணைவிகளுடன் எப்பொழுதும் சேர்ந்திருப்பதால் உங்களோடு நான் மண வாழ்க்கையில் இருந்து பிரிவதை இதன் மூலமாக அறிவிக்கிறேன். உங்களை விவாகரத்து செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.