அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் பென்டகன் மூத்த அதிகாரி மர்ம உளவு பலூன் தங்கள் நாட்டு வான் பரப்பின் மீது பரந்த காரணத்திற்காக சீனாவை கடுமையாக சாடியுள்ளார். ஆனால் சீனாவோ அது உளவு பலூன் அல்ல. வானிலை ஆய்வுக்காக தாங்கள் அனுப்பிய ஒரு வின் ஓடம் தான் என விளக்கம் அளித்தது. ஆனால் இந்த பலூன் விமானங்கள் பறக்கும் உயரத்தை விட அதிகமான உயரத்தில் பறப்பதால் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருந்தது. இதனால் சீனா அளித்த விளக்கத்தை அமெரிக்கா ஏற்க மறுத்து விட்டது.

இதனையடுத்து அட்லாண்டிக் பெருங்கடலில் பறந்து கொண்டிருந்த சீனாவின் உளவு பலூனை சுட்டு விழித்த அமெரிக்க ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் உளவு பலூன் ராணுவ அதிகாரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட உலவுப் பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. அந்த பலூனையும் அதில் இருந்த சில கருவிகளின் சிதறிய பாகங்களையும் அமெரிக்க விமானப்படை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றது. இந்த நிலையில் ஆய்வில் அது உளவு பலூன் தான் என்றும் அதனை சீனா அனுப்பியது மிகப்பெரிய சர்வதேச குற்றமாகும் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதனை அடுத்து உளவு பலூன் சீனாவின் விமானப்படைகளால் இயக்கப்பட்டு வந்ததும் ஐந்து கண்டங்களை தாண்டியதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே இந்த உலவும் பலூன்களை சீனா இயக்குவதும் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது “தென் சீன கடற்பகுதியில் அமைந்துள்ள சீனாவின் ஹைணன் மாகாணத்தில் இருந்து இந்த உளவு பலூன் இயக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஜப்பான், வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற பல்வேறு நாடுகளின் ராணுவ தளங்கள் மற்றும் ரகசிய இடங்களை கண்காணித்துள்ளது” என்று கூறியுள்ளனர்.