
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு மாணவி ஆராய்ச்சி படிப்பு படித்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இந்த மாணவிக்கு 27 வயது ஆகும் நிலையில் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் நேற்று இவர் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, நான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தேன்.
நான் பிஎச்டி படித்த நிலையில் அங்கு நோயியல் பிரிவில் உதவி பேராசிரியராக ராஜா என்வர் இருந்தார். இவர் என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்த நிலையில் அதனை வீடியோவாக எடுத்து வைத்து தற்போது மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவி ஒருவர் உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.