மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு என்பது பெரும் கலவரமாக வெடித்துள்ள நிலையில் கடந்த ஒரு வருடமாகவே பதற்றம் நிலவுகிறது. சமீப காலமாக பதற்றம் கூடிய நிலையில் பலர் காணாமல் போகும் நிலையில் அவர்கள் சடலமாக மீட்கப்படுகிறார்கள். பல இடங்களில் வன்முறைகள் வெடிப்பதோடு பொதுமக்களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. எங்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மணிப்பூர் பற்றி எரிகிறது. அங்கு பாஜக ஆட்சியில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருக்கிறார். அந்த மாநிலத்தில் அமைச்சர்களின் வீடுகள் சூறையாடப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த தேசிய மக்கள் கட்சி தற்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சங்மா ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் பாஜகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். அதாவது மணிப்பூரில் நெருக்கடியை தவிர்க்கவும் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் பாஜக அரசு தவறிவிட்டதாக அவர் குற்றச்சாட்டு தெரிவித்து இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக இந்த ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே காங்கிரஸ் மணிப்பூரில் நிலவும் பதற்றத்தை தடுக்க பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.