பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தேவேந்திர குல வேளாளர் சமூகம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தேர்தல் வரவுள்ள நிலையில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் மணி மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனின் சமூக பங்களிப்பினை போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி, அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலையும், மணிமண்டபமும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.