
இந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மிகப்பெரிய அளவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரில் கட்டப்பட்டு வந்த ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட நேற்று மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அளவில் பதிவானது.
இந்நிலையில் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 1002-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 2,376 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மியான்மரை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் இன்று காலை 5.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நாளில் நடக்கும் 4.7-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.