தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்யும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது

இந்நிலையில் லியோ படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் தளபதி ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர். ரசிகர்களை பார்பதற்காக தளபதி விஜய், கேரவனிலிருந்து வெளியே வந்து கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் தளபதியை சூழ்ந்து கொண்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அப்போது ஆந்திரா காவல்துறையினர் விஜய்யின் பாதுகாப்பை கருதி ரசிகர்களை கட்டுப்படுத்தினர்.