
சென்னையில் தலைமைச் செயலகம் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறிக்கை திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் போட்டார். அவர் தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.