
சமீபத்தில் இணையதளத்தில் நொய்டாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ வெளிவந்தது. அப்போது சொகுசு காரில் வந்த ஒரு பெண்மணி பூந்தொட்டிகளை திருடி சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஸ்கூட்டியில் வந்த இளம் பெண் ஒருவர் பூந்தொட்டிகளை திருடி விட்டு சென்றுள்ளார். அதாவது ஒரு பரபரப்பான சாலையில் ஏராளமான வாகனங்கள் இருக்கிறது.
அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒரு வீட்டின் முன்பாக இருந்த பூந்தொட்டிகளை திருடிவிட்டு ஸ்கூட்டியில் சென்று விட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ஒரு பயனர் பணக்காரர்கள் வீட்டில் உள்ள பூந்தொட்டிகள் மற்றும் செடிகளை திருடி நம்முடைய வீட்டில் நட்டால் செல்வம் செழிக்கும் என்பதால் அந்த பெண் அப்படி செய்திருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ஒவ்வொரு பயனரும் தங்களுக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
A Lady On Scooter Got Caught stealing Flowers pots in Broad Day-Light pic.twitter.com/CKj4ax7cRE
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 16, 2024