
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம் ஹரிசந்தன்பூர் சந்தையில் உள்ள ஒரு நகைக் கடையில், ஆயுதமேந்திய மர்மநபர்கள் நடத்திய கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, சந்தையின் நடுப்பகுதியில் உள்ள நகைக் கடையில் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்து, உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை மிரட்டி, நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் முழுமையாக பதிவாகியுள்ளது. நகை கடை உரிமையாளர் அளித்த தகவலின்படி, சம்பவம் நேரம், அவர் அருகிலுள்ள கடைக்கு தேநீர் குடிக்கச் சென்றிருந்தபோது, பெண் வாடிக்கையாளர்கள் சிலர் கடையில் இருந்தனர்.
ओडिशा : केयोनझर में दिनदहाड़े ज्वेलरी शॉप में लूट, लाखों की नकदी और गहने ले उड़े बदमाश
◆ हथियारों से लैस लुटेरों ने 7-8 मिनट में दुकान खाली कर दी
◆ CCTV में कैद हुई वारदात, पुलिस ने शुरू की तलाश
Odisha | #Robbery | #JewelleryHeist | CCTV Footage pic.twitter.com/lF96hORUcP
— News24 (@news24tvchannel) July 3, 2025
திரும்பி வந்ததும், ஒரு இளைஞர் அவரது பின்னால் கடைக்குள் நுழைந்ததாகவும், பின்னர் மற்ற நான்கு பேரும் உடனடியாக நுழைந்து துப்பாக்கியால் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். நகைகளின் இருப்பிடம் குறித்து கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது போல செயல்பட்டதாகவும் தெரிவித்தார். அவர்கள் 7-8 நிமிடங்களுக்குள் நகைகளை திருடி விட்டு தப்பிச் சென்றனர்.
சம்பவத்தின் தகவல் கிடைத்த உடனே, ஹரிசந்தன்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, தப்பிச் சென்ற கொள்ளையர்களை பிடிக்க சுற்றியுள்ள சாலைகளை சீல் செய்து தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். காவல்துறையின் தீவிர முயற்சியினும், இதுவரை எந்தவொரு கொள்ளையரும் கைது செய்யப்படவில்லை.
இது மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும், பாதுகாப்பு குறைபாடு குறித்த பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது. மக்கள், இத்தகைய சம்பவங்களுக்கு காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுத்து, கொள்ளையர்களை கைது செய்யவேண்டும் எனக் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.