
தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு மதுரையில் இருந்து அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 87 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்தின் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியது. பேருந்தின் பின்புற சக்கரங்களின் அச்சு உடைந்து சாலையில் தனியாக ஓடியது.
உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் சாலை ஓரமாக பேருந்தை நிறுத்தினார். இந்த விபத்தில் படியில் பயணம் செய்த மாணவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவர்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடந்த நேரம் வேறு வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
A government TNSTC bus reportedly lost its entire rear axle near Idaikal in Tenkasi, causing a major mishap. Around 87 passengers had a narrow escape, with only few sustaining injuries. Traffic was affected on Thirumangalam-Kollam NH. pic.twitter.com/EkSnPVrlWF
— Thinakaran Rajamani (@thinak_) June 20, 2025