
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் ஒரு கல்லூரி விடுதி கட்டிடத்தின் மேல் விழுந்து நொறுங்கியது. விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் இருந்த 241 பயணிகள் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
இந்த விமானம் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மேல் விழுந்ததால் அங்கிருந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். அதன்படி 10 மாணவர்கள் உட்பட பொதுமக்கள் என 33 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரி விடுதியில் சமையல் ஊழியராக ஷர்லாபென் தாகூர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் விமான விபத்தின் போது அங்கு சமையல் செய்து கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில் அவருடைய பேத்தியான இரண்டு வயது குழந்தையும் உடன் இருந்துள்ளது.
இந்த விமான விபத்தின் போது ஷர்ளா பென் தாக்கூர் இறந்திருக்கலாம் என அவரது மகன் அஞ்சுகிறார். அதோடு அவரது குழந்தையும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர் தன்னுடைய தாயையும் குழந்தையையும் கவலையோடு தேடுவது மிகவும் வேதனையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.