
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி ஹமாஸ் குழுவினர் நடத்திய பயங்கர தாக்குதலில் சேர்ந்த 1139 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணைய கைதிகளாக உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 170 டோன்கள் 150 ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது ஈரல் தாக்குதல் நடத்தியது. சுமார் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானிலேயே வீழ்த்தப்பட்டது.
ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் ஏற்கனவே கூறியிருந்தது. இந்த நிலையில் ஈரானின் ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரான் பல மாதங்களாக தாக்குதல் நடத்துகிறது. உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும் பதில் அளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம் என என இஸ்ரேல் கூறியுள்ளது.
மற்றொருபுறம் ஈரான் போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் ராணுவத்திற்கு அந்த நாட்டின் உயர் தலைவர் கூறியுள்ளார். அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கேற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் ஈரானில் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டால் ஈரான் ராணுவம் மிகப் பெரிய அளவில் பதில் தாக்குதல் நடத்தும் என்றும், அதே சமயம் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கேற்றவாறு பதிலடி கொடுப்போம் என்றும் ஈரானை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.