ஒரு பயங்கர விபத்தில் இருந்து முன்னெச்சரிக்கையால் பெரும் உயிரிழப்பை தவிர்த்த அதிசய சம்பவம் ஒன்று சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை (ஜூன் 18) பிற்பகல் 3 மணியளவில், அடையாளம் தெரியாத ஒரு வீட்=டில் எல்பிஜி சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. அந்த வீடு முழுவதும் தீயில் சிக்கிய நிலையில், அதற்குள் இருந்த ஒரு பெண்ணும் ஆணும் தக்க  சமயத்தில் வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது  வீட்டில் இருந்த எல்பிஜி சிலிண்டரிலிருந்து அதிக அளவில் வாயு கசிய தொடங்கியது. அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒரு நடுத்தர வயது பெண், குழாயினை  இறுக்க முயற்சிக்கிறார். ஆனால் வாயு கசியலைத் தடுக்க முடியாமல், அவர் உதவிக்காக ஓடிச் செல்வது காணப்படுகிறது. சில நிமிடங்களில், அந்தப் பெண் ஒருவர் ஆணுடன் மீண்டும் அந்த இடத்திற்கு வருகிறார். இருவரும் வேறு வாசல்கள் வழியாக வீடு புகுந்து, கசிவை நிறுத்த முயற்சிக்கிறார்கள்.

இந்நிலையில், அறை முழுவதும் வாயு நிரம்பியிருந்த காரணத்தால், சிலிண்டர் அருகே சென்று குழாயை இறுக்கும் போது சமையலறையில் வெடிப்பு ஏற்பட்டு, பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் வீடு முழுவதும் வாசல்கள் மற்றும் ஜன்னல்கள் திறந்திருப்பதால், வாயு வெளியேறி வெடிப்பின் தாக்கம் குறைந்தது. இதனால், அதே நேரத்தில் அந்தப் பெண் மற்றும் ஆண் தீயில் சிக்காமல் அதிசயமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தில், பெண்ணின்செயல்பாடும், விபத்தை தவிர்க்க ஏற்பட்ட சிந்தனையும் பெரும் பாதிப்பைத் தவிர்த்துள்ளது. வீடியோவை பகிர்ந்த பலர் “ஜன்னல்கள் திறந்திருப்பது ஒரு பெரிய பலனாக அமைந்தது” எனக் கருத்து தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படாமல் தப்பியது ஒரு அதிசயமாக கருதப்படுகிறது. இந்த வீடியோ சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.