
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூரைச் சேர்ந்தவர் சுதாகர்(48). இவரது மனைவி அஸ்வினி. இவர் திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி அவினேஷ் (28).
இந்த நிலையில் அவினேஷுக்கும் சுதாகருக்கு இடையே முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபத்தில் அவினேஷ் சுதாகரை சரமாரியாக வெட்டினார்.
இதனால் படுகாயமடைந்த சுதாகர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது சுதாகர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.