
கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி ரேகா. இவர் அதிகமாக செல்போன் உபயோகித்து வந்தார். மனைவி நீண்ட நேரமாக ரீல்ஸ் பார்ப்பதை கணேஷ் பலமுறை கண்டித்ததாக தெரிகிறது.
அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து ரேகா ரீல்ஸ் பார்த்து வந்ததால் கோபமடைந்த கணேஷ் தனது மனைவி ரேகாவை அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரேகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து கணேஷை பிடித்து விசாரணை நடத்திய போது, தான் கூறியதை மீறி செல்போனில் ரிலீஸ் பார்த்ததால் மனைவியை கொலை செய்ததாக கணேஷ் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.