பாகோடு மாதிக்காவிளையைச் சேர்ந்த தேவராஜ்-மாரியாஜோய் (67) தம்பதிகளுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களது இளைய மகனான சந்தோஷ்குமாருக்கு சைனிமோள் என்ற மனைவி உள்ளார். இவர்களும் ஒரே வீட்டில் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

இந்தக் குடும்பத்தில், மருமகள் சைனிமோளுக்கும் மாமியார் மாரியாஜோய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதம் கட்டுப்பாட்டை மீறிய அளவுக்கு வளர்ந்தது.

சம்பவ நாளன்று, தகராறு முற்றி இருவரும் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில்  சைனிமோள், அடுப்பில் இருந்த சுடுதண்ணீரை எடுத்து வந்து, மாமியார் மீது ஊற்றி விட்டார். இதனால் மாரியாஜோய் அலறி துடித்தார்.

அவரது சத்தம் கேட்டு அருகிலிருந்த உறவினர்கள் ஓடிவந்து அவரை மீட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னர், மாரியாஜோய் நேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சைனிமோளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.