ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. நாக்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காதல் மோர் பகுதியில், பட்டப்பகலில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரை சில ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கினர். இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மூன்று முதல் நான்கு பேர் வரை இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர்  கற்கள் கொண்டு தாக்கியதில், போலீசர் ரோஹித் கஞ்சு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உடனடியாக ராஞ்சியின் ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால், அது தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் போலீசாரிடையே கடுமையான மோதல் நடைபெறுவது, கற்கள் வீசும் காட்சிகள் உள்ளிட்டவை தெளிவாகக் காணப்படுகின்றன.

https://x.com/inderjeetbarak/status/1932474408632746358?t=l2yvopdqyM9sv_owuIXEqw&s=19

தற்போது, தாக்குதலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் அவர்களை கைது செய்ய தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். ராஞ்சி போக்குவரத்து எஸ்பி, “பணியில் இருந்த போலீசரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை நாக்டி காவல் நிலையம் முன்னெடுத்து வருகிறது.