தமிழில் அழகிய தீயே, ராமன் தேடிய சீதை, ரசிக்கும் சீமானே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை நவ்யா நாயரிடம் பணமோசடி வழக்கு தொடர்பாக  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியுள்ள ஐஆர்எஸ் அதிகாரி சச்சின் சாவந்த் உடன் நவ்யா நாயருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

சச்சின் சாவந்த் நவ்யாவுக்கு விலைமதிப்புள்ள நகைகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரது தொலைபேசி உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் தங்கள் நண்பர்கள் மட்டுமே, வேறு எவ்வித தொடர்பும் இல்லை என நடிகை விளக்கமளித்துள்ளார்.