மதுரை மாவட்டத்திலுள்ள தபால் தந்தி நகர் தனியார் பள்ளி அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் நடைபெறுசி செய்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த நபர் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியானது.

முதலில் அவர் செயினை பறிக்க வந்தார் என அந்த பெண் நினைத்தார். ஆனால் அந்த நபர் அந்த பெண்ணின் அந்தரங்க பகுதியை தொட்டு சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாகன பதிவு எண் மற்றும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.