புனே மாவட்டத்தின் ஷைலேஷ் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 11) அன்று நடைபெற்ற அரிதான இயற்கை நிகழ்வு மக்கள் மனங்களை கவர்ந்தது. இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து ஆடிய ‘நடனம்’ பொதுமக்கள் பார்வையில் நேரடியாக நடைபெற்றது. இந்த அழகிய, அபூர்வமான நிகழ்வைப் பார்த்த மக்கள் மிகுந்த ஆச்சரியத்தில் உள்ளனர்.

பிற்பகல் நேரத்தில் நடந்த இந்த நிகழ்வை, அப்பகுதியில் வசிக்கும் பலர் தங்களின் மொபைல் போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் விரைவாக பரவி, இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பாம்புகளின் இந்த நடனம் பொதுவாக அரிதாகவே காணப்படும் இயற்கை நிகழ்வாகும். இரு பாம்புகளும் இணைந்து மேலே தூக்கி, வளைந்து நுணுக்கமாக அசைவது இதற்கேற்ப “மேட்டிங் டான்ஸ்” என அழைக்கப்படுகிறது.

 

இந்த இயற்கை நிகழ்வின் நேரடி காட்சியை கண்ட மக்கள் குழப்பத்துடனும், ஆச்சரியத்துடனும் போனில் பதிவுசெய்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் பொதுவாக காட்டுப்பகுதிகளில் மட்டுமே நடைபெறும். ஆனால் நகர் பகுதியில் இத்தகைய சம்பவம் அரிதானதாகக் கருதப்படுகிறது. இது போன்ற தருணங்களை நம் சமூகத்தில் உணர்த்துவதன் மூலம், இயற்கையின் அதிசயங்களைப் புரிந்துகொள்வதற்கான விழிப்புணர்வும் அதிகரிக்கிறது என்று வனத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.