உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி நகரத்தில், கங்கனஹர் கோட்வாலி பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முகேஷ் குமார் என்ற நபர் தனது கடைக்குச் சென்றிருந்த நேரத்தில், ஒரு இளைஞன் அவரது வீட்டில் புகுந்து, சமையலறையில் இருந்த எல்பிஜி சிலிண்டரைத் தோளில் சுமந்துக்கொண்டு நடந்து சென்றான். இந்த திருட்டு சம்பவம் முழுவதுமாக சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடையின் உரிமையாளர் முகேஷ், காலை 9.15 மணியளவில் கடைக்குச் சென்று விட்டு வந்தபோது, வீட்டு கதவு திறந்திருந்ததையும், சிலிண்டர் மாயமாகி இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். சிசிடிவி காட்சிகளில், திருடன் கேட்டிலிருந்து வெளியே வந்தவுடன்  சிலிண்டருடன் சாலையில் விழும் காட்சி தெளிவாக காணப்படுகின்றது. இதனால் அந்த நபர் திருடனாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

 

இச்சம்பவம் தொடர்பாக முகேஷ் போலீசில் புகார் அளித்ததையடுத்து, ரூர்க்கி காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்து, குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.