
சுவிட்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் தங்களுடைய விருப்பத்துடன் கருணை கொலை செய்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதிக்கிறது. அதை தனிமனித உரிமையாக அரசு கருதுகிறது. இந்த நிலையில் அவ்வாறு இறக்க விருப்பப்படுவார்கள் ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இந்த கேப்சிலுக்குள் நபர் படுத்து ஒரு பட்டனை அழுத்தினால் உள்ளே உள்ள காற்று ஆக்ஸிஜன் வாயு வெளியேற்றப்பட்டு நைட்ரஜன் மட்டுமே மிஞ்சும். இதனால் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். தீராத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் முதியவர்கள் அமைதியான மரணத்தை எதிர்கொள்வதற்கு இது பயன்படும் என்று இந்த திட்டத்தை இது சார்ந்து இயங்கி வரும் கடைசி புகலிடம் அமைப்பானது வரவேற்றுள்ளது .
இந்த கேப்சூலியில் உள்ளே படுத்ததும் கதவை மூட வேண்டும். உள்ளே உள்ள ஆட்டோமேட்டிக் இயந்திர குரல் நீங்கள் யார்? எங்கு இருக்கிறீர்கள்? பட்டனை அழுத்தினால் உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா? என்ற கேள்விகளை கேட்கும். அதற்கு பதில் அளித்த பின் பட்டனை அழுத்தினால் உள்ளே உள்ள காற்றில் ஆக்ஸிஜன் வாயு30 வினாடிகளில் 21 சதீவீதத்தில் இருந்து 0.05% ஆக குறைந்துவிடும். உள்ளே உள்ள நபர் மயக்க நிலையில் இருப்பார். சுமார் ஐந்து நிமிடங்கள் கழித்து மரணம் ஏற்படும் . இந்த பட்டனை அழுத்திய பிறகு தங்களுடைய முடிவை யாராலும் மாற்ற முடியாது.