திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் ரவி (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது வீட்டிற்குள் நுழைந்தது.

அவர்கள் ரவியை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக திருத்தணி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் பாதுகாப்புக்காக சம்பந்தப்பட்ட கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.