
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மன்னார்குடியை சேர்ந்த திருமுருகன் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பரிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். ஆனால் சரியான நேரத்தில் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த திருமுருகன் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த திருமுருகனின் மனைவி உஷா தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருமுருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.