
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சுரேஷ்பாபு (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அனிதா என்ற மனைவி இருக்கிறார். இவர் அதே பகுதியில் உள்ள வேறு ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
அப்போது அனிதாவுக்கு அதே பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்யும் பாபாவலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் அனிதாவின் கணவருக்கு தெரிய வந்த நிலையில் அடிக்கடி தன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் அனிதா வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்த நிலையில் தன்னுடைய கணவர் வேலைக்கு சென்ற பின் கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அனிதாவின் கணவர் குடி போதைக்கு அடிமையாக தினமும் குடித்துவிட்டு தன் மனைவியுடன் சண்டை போடுவார்.
இதன் காரணமாக அனிதா தன் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி சம்பவ நாளில் வேலை முடிந்து மது போதையில் சுரேஷ் பாபு வீட்டிற்கு வந்த நிலையில் இந்த தகவலை தன் கள்ளக்காதலனிடம் அனிதா கூறினார்.
அப்போது அவரது கள்ளக்காதலன் குடிபோதையில் தடுமாறி வந்த அவர் மீது காலி மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில் பின்னர் ஸ்கூரு டிரைவரால் குத்தி தலையில் பாறாங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பநாய் உதவியோடு குற்றவாளியை கைது செய்தனர். அனிதா மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.