
ஐபிஎல் 18 வது போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார்.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றியை கொண்டாடும் விதமாக பஞ்சாப் அணியின் உரிமையாளர் மற்றும் வீரர்கள் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கேக் வெட்டிய பிறகு கேப்டனுக்கு பஞ்சாப் அணியின் உரிமையாளர் ஊட்டி விட்டார்.
Ness Wadia kissed Iyer on the cheek but he Swiped it off with a Napkin 😭😭😂🤣 pic.twitter.com/KWSZrRty5J
— Sukham 𝕏 (@LionsDenPBKS) June 2, 2025
அவர் அன்போடு கேக் ஊட்டி விட்டு முத்தம் கொடுத்த நிலையில் அனைவரும் கைத்தட்டினர். அப்போது திடீரென கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அவர் முத்தம் கொடுத்த கன்னத்தை டிஷ்யூ பேப்பரால் துடைத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.