
கடலூர் மாவட்டம் வடலூரில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு சூர்யா- சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பாசிமணி ஊசிமணி விற்பனை செய்து வரும் நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதன்படி 2 வயதில் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பெண் குழந்தை மைதிலி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அடுப்பு பற்ற வைப்பதற்காக வைத்திருந்த டீசலை எடுத்து தண்ணீர் என நினைத்து குழந்தை குடித்து விட்டது.
இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து நிலையில் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.