கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்த நிலையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்த நிலையில் இன்னும் மீட்பு பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், பாஜக கட்சியின் மூத்த தலைவருமான கியான் தேவ் அகுஜா ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பசுவதை செய்ததால் தான் கேரளாவில் மிகப்பெரிய நிலச்சரிவு போன்ற பேரழிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆராய்ந்து பார்த்தால் பசுவதை செய்யப்பட்ட பகுதிகளில் தான் அதிக அளவில் நிலச்சரிவு என்பது ஏற்படுகிறது. வயநாடு நிலச்சரிவு என்பது பசு மாடுகளை கொல்லும் சம்பவத்தோடு நேரடி தொடர்பு கொண்டது. எனவே இனியும் கேரளா பசுவதை செய்வதை நிறுத்தாவிட்டால் இன்னும் இது போன்ற பேரழிவுகள் நிச்சயம் நடக்கும். மேலும் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மேகவெடிப்பின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருந்தாலும் கேரளாவை ஒப்பிடும்போது அங்கு மிகவும் குறைவுதான் என்று தெரிவித்துள்ளார். இவர் பேசிய விஷயம் தற்போது சர்ச்சையாக மாறிய நிலையில் பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

 

1