சென்னையில் கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கி வரும் 27 பசுமை பண்ணைகளில் குறைந்த விலையில் காய்கறி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சுயசேவை பிரிவுகள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனையும் வீட்டில் நடைபெறுகிறது. 19 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் மலிவான விலையில் மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன.