உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை சிறப்பான முறையில் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிலும் பக்ரீத் பண்டிகை களைகட்டியது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சூடி வாலா பகுதியில் நெருக்கமான கட்டிடங்கள் நிறைந்த பகுதி ஒன்று அமைந்துள்ளது.

இங்கு சங்கர்மர் என்ற பழைய மசூதி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடம் நேற்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. இது அப்பகுதியில் இருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.