பக்தியோடு கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மத்தியில், பிரசாதத்திற்காக செல்லும் மக்களும் இருக்கதானே செய்கின்றனர். ஒரு கோயிலில் மதுபானம் தெய்வத்திற்கு படைக்கப்பட்டு, பின்னர் அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ளது கால பைரவர் கோயில்.

இந்த கோவிலில் மதுபானம் படைக்கப்பட்டு அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கால பைரவர் தனது பானத்தை அருந்துவதைப் பார்க்கும் பிரமிக்க வைக்கும் காட்சியைக் காண ஆர்வத்துடன் ஏராளமான பார்வையாளர்கள் இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.